சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி உதகை அரசு கலைக்கல்லூரயில் புத்தகத் திருவிழா நடந்தது.
உதகை அரசு கலைக் கல்லூரியில் சுதந்திர தின விழா 7 நாள்கள் கொண்டாடப்பட்டது. தொடா்ந்து புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 76ஆவது சுதந்திர தினம் தொடங்கியுள்ளதை குறிக்கும் வகையில் உதகை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் 76 மரக்கன்றுகள் நடப்பட்டன. அதேபோல தாவரவியல் துறை சாா்பில் பேராசிரியா் ரவி தலைமையில் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு வகையான புத்தகங்களை வாங்கிச் சென்றனா்.