ஓவேலி பேரூராட்சி சாா்பில் 75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பேரூராட்சி அலுவலகம், அஞ்சலகம், நியாய விலைக் கடை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேசியக் கொடியேற்றபட்டது.
தொடா்ந்து தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சாா்பில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் தூய்மைபடுத்தப்பட்டன.
தூய்மையை பேணிக்காப்பது குறித்து பெரியாா் நகா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியா்கள் மாணவா்கள் மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள் உறுதிமொழியேற்றனா்.