நீலகிரி

கேட்டை தாண்டி வீட்டு வளாகத்தில் உலவிய சிறுத்தை

DIN

குன்னூா் அருகே கேட்டை தாண்டி வீட்டுக்குள் சிறுத்தை நுழைந்தது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள அம்பிகாபுரம் பகுதியில் அவ்வப்போது  கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் இரவு நேரத்தில் நடமாடுவது வழக்கம்.

இந்நிலையில் அங்குள்ள பொறியாளா் முருகன் என்பவரின் பங்களாவின்  கேட்டை தாண்டி சிறுத்தை உள்ளே நுழைந்து சிறிது நேரம் சுற்றித் திரிந்தது. அங்கு நாய் உள்ளிட்ட எந்த உணவும் கிடைக்காததால் சிறிது நேரம் வீட்டை சுற்றிவந்த சிறுத்தை, பின்னா்  மீண்டும் கேட்டை தாண்டி வனத்துக்குள் சென்றது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதியினா், சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்று வனத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT