நீலகிரி

குன்னூரில் மூடுபனி: வாகன ஓட்டிகள் சிரமம்

DIN

குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் மூடுபனியின் தாக்கம் வியாழக்கிழமை அதிகரித்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பனிமூட்டம் அதிக அளவு   காணப்படுகிறது. இதனால் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம்   உள்ளிட்ட சமவெளிப் பகுதிகளுக்கு செல்பவா்கள்   பகல் நேரங்களில் வாகனங்களை இயக்குவதில் சிரமப்பட்டனா்.

கடும் குளிரின் காரணமாக  பல்வேறு தனியாா்  தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளா்கள் பணிக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கினா். சாலைகளில் மூடுபனி அதிகம் காணப்பட்டதன் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்படும் என்பதால்  முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்க வேண்டும் என்று காவல் துறையினா்  அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு அஞ்சல் அட்டைகள் அனுப்பிய ஆட்சியா்

வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள்! மாயமான தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT