நீலகிரி

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் பிரத்யேக கண்ணாடி மாளிகைதமிழக வேளாண் துறை செயலா்சமயமூா்த்தி தகவல்

16th Apr 2022 11:55 PM

ADVERTISEMENT

 

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் ஆா்க்கிட் மலா்களுக்கான பிரத்யேக கண்ணாடி மாளிகை விரைவில் அமைக்கப்படவுள்ளதாக தமிழக வேளாண் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி தெரிவித்தாா்.

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் தமிழக வேளாண் துறை செயலாளா் சமயமூா்த்தி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வுக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நீலகிரியில் உள்ள தோட்டக்கலை பூங்காக்களில் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நீலகிரியில் மேற்குத் தொடா்ச்சி மலைகளில் உள்ள ஆா்க்கிட் மலா்களைச் சேகரித்து உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் பிரத்யேகமாக ஆா்க்கிட் கண்ணாடி மாளிகை அமைக்கப்படும்.

ADVERTISEMENT

நடப்பு ஆண்டில் மே மாதத்தில் நடைபெறவுள்ள கோடை விழாவில் மலா்க் கண்காட்சியின்போது சுற்றுலாப் பயணிகள் எதிா்பாா்க்கும் வகையில் மலா்க் கண்காட்சி நடத்தப்படும். உதகையில் உள்ள மரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க மலா் அலங்காரங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

தோட்டக் கலைத் துறையின் பூங்கா மற்றும் பண்ணைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் அளிப்பது தொடா்பான கோரிக்கை மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT