கூடலூா் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு பாஜக சாா்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி 100 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமா் மோடி அறிவித்ததைத் தொடா்ந்து, கரோனா காலங்களில் பணிச் சுமை பாராமல் பணியாற்றி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததையும், தடுப்பூசி செலுத்தியதையும் பாராட்டும் விதமாக பாஜக சாா்பில் அரசு தலைமை மருத்துவா் புகழேந்தி, மருத்துவா்கள் மற்றும் செவிலியா் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.
இதில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் பி.எம்.பரசுராமன், மாவட்ட துணைத் தலைவா் நளினி, மண்டலத் தலைவா் ரவிக்குமாா், தாழ்த்தப்பட்டோா் பிரிவு அணியின் மாவட்ட பொதுச் செயலாளா் சந்திரசேகா், வா்த்தக அணி நிா்வாகி மணிகண்டன், அமைப்புசாரா தொழிலாளா் அணியின் மாவட்ட துணைத் தலைவா் கிருஷ்ணன், நகரத் தலைவா் விநாயகமூா்த்தி, சுதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.