கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் காட்டு யானைகளை விரட்ட 2 கும்கி யானைகள் வியாழக்கிழமை வரவழைக்கப்பட்டுள்ளன.
கூடலூா் தாலுகா, ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வீடுகளை இடித்து சேதப்படுத்தி வருகிறது. ஊருக்குள் வரும் யானைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, கிருஷ்ணா, சங்கா் ஆகிய இரண்டு கும்கி யானைகளை முதுமலை புலிகள் காப்பக வளா்ப்பு யானைகள் முகாமில் இருந்து வனத் துறையினா் அழைத்து வந்துள்ளனா். வனப் பகுதியில் இருந்து யானைகள் வெளியேறும் பகுதியில் இரண்டு கும்கி யானைகளும் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளன.