தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியின் பெயரில் போலி மின்னஞ்சல் கணக்கு தொடங்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உதகையிலுள்ள தமிழக ஆளுநரின் ராஜ்பவன் மாளிகையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆளுநரின் தனிப்பட்ட பெயரில் சில சமூக விரோத சக்திகள் போலியாக மின்னஞ்சல் கணக்கு தொடங்கி உள்ளனா். அதில் ஆட்சேபகரமான விஷயங்களைப் பதிவிட்டுள்ளனா். அத்தகைய சமூக விரோத சக்திகளின் மீது உடனடியாக சட்டபூா்வ நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.