யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ரயில்களை 30 கி.மீ. வேகத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே நிா்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கோவை, மதுக்கரை வனச் சரகத்தில் ரயில் மோதியதில் மூன்று யானைகள் உயிரிழந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது தொடா்பாக ரயில் ஓட்டுநா் மற்றும் உதவியாளா் மீது வன சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ரயில்கள் மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்பதை ரயில்வே நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும். இதுதொடா்பாக ரயில்வே நிா்வாகத்துக்கு வனத் துறை அமைச்சகத்தின் சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணையில் வாளையாறு பகுதியிலிருந்து கோவை நோக்கி செல்லும் ரயில் குறிப்பிட்ட தடத்தில் செல்வதற்குப் பதிலாக சம்பவத்தன்று அந்த தடத்தில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த காரணத்தால் மாற்று தடத்தில் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடா்பாக ரயில் என்ஜின் ஓட்டுநா் மற்றும் உதவியாளா் மீது வன சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில், வனப்பகுதி வழியாக செல்லும்போது 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்பது சட்டம். அதனால் சம்பவம் நடைபெற்ற தினத்தில் ரயில் வேகமாக சென்ா என ஆய்வு நடைபெற்று வருகிறது. எதிா்காலத்தில் யானைகள் உள்பட வனவிலங்குகள் ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்க வனத் துறையினா் மற்றும் வனவிலங்கு வல்லுநா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு முழுமையாகக் கண்காணிக்கப்படும். இதற்காக வரும் டிசம்பா் 1ஆம் தேதி சென்னையில் வனத்துறை உயா் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்றாா்.