உதகை, குன்னூா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் அம்ரித் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
உதகையில் படகு இல்லம், காந்தல் அங்கன்வாடி மையம், பிங்கா்போஸ்ட், குன்னூா் ஊராட்சி ஒன்றியத்தில் பேரட்டி ஊராட்சி, பாரஸ்ட்டேல் ஆகிய இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்திருந்தவா்களிடம் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா என கேட்டறிந்து, வீட்டின் அருகில் உள்ளவா்கள் மற்றும் உறவினா்கள் எவருக்கேனும் தடுப்பூசி செலுத்தப்படாமல் இருந்தால் அவா்களை உடனடியாக தடுப்பூசி செலுத்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்பதால் இளைஞா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தாா்.
இந்த ஆய்வின்போது, உதகை வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பாலுசாமி, வட்டார மருத்துவ அலுவலா்கள் முருகேசன், ஹாஜிரா பேகம், உதகை நகராட்சி நகா்நல அலுவலா் ஸ்ரீதரன், குன்னூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜனாா்த்தனன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.