கூடலூா் பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு சேவாலயா அமைப்பு சாா்பில் நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
கூடலூரில் உள்ள சேவாலயா சமரிட்டன் கிராமோதரன் சமிதி மருத்துவமனை மூலம் மன்னை ராஜசேகா் நினைவு சினேகம் அறக்கட்டளை அமைப்பைச் சோ்ந்த தஞ்சை பூண்டி கல்லூரி நட்புச் சங்கமம் குழுவினா், கூடலூா் பகுதியில் உள்ள 50 பழங்குடி குடும்பங்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ. 42 ஆயிரத்து 500 மதிப்புள்ள உலா் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. பழங்குடி மக்களுக்கு சேவாலயா மையத் தலைவா் பிரியதா்ஷினி நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.