ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி, நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
மஞ்சூா் பகுதியில் பொதுமுடக்கத்தின் காரணமாக தொழில் முடங்கியிருக்கும் தையல் தொழிலாளா்கள், முடி திருத்தும் தொழிலாளா்கள் 50 பேருக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி செயலாளா் நாகராஜ் தலைமையில், அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கோவிலட்டி, தாய்சோலை, கேரிங்டன், கிண்ணக்கொரை, காமராஜ் நகா் பகுதிகளில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டன.
வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஆ.நேரு முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில், திமுக மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் பாபு, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளா் ராஜ்குமாா், கீழ்குந்தா பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஆனந்த், வட்டார துணைத் தலைவா் போஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.