நீலகிரி மாவட்டத்தில் மேலும் 308 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
இதுதொடா்பாக உதகையில் சுகாதாரத் துறையின் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நீலகிரி மாவட்டத்தில் புதிதாக மேலும் 308 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 503 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதகையைச் சோ்ந்த 58 வயதான ஆண் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 26,246 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 22,834 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 138 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், மருத்துவமனைகளிலும் 3,274 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.