நீலகிரி மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் உதகையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 82 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 30,073 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 29,084 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, இதுவரை 173 போ் உயிரிழந்துள்ள நிலையில், பல்வேறு மருத்துவமனைகளிலும் 816 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.