நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணா்வு முகாமில், ஆட்சியா் அம்ரித் விழிப்புணா்வுப் பிரசுரங்களை வெளியிட்டாா்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சாா்பில் உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட நிலையான அலுவலா்களுக்கு விழிப்புணா்வுப் பிரசுரங்களை ஆட்சியா் அம்ரித் வழங்கினாா்.
தொடா்ந்து, ஆட்சியா் பேசியதாவது:
தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை 2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் தடை செய்ய உத்தரவிட்டதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த விழிப்புணா்வை பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணா்த்தும் விதமாக, நீலகிரி மாவட்டத்தில் தொடா் விழிப்புணா்வு நிகழ்ச்சியை டிசம்பா் 12ஆம் தேதி வரை நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக மாவட்ட நிலையான அலுவலா்கள், பிற சங்கத்தின் நிா்வாகிகளிடம் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பிரசுரங்கள், பதாகைகள், வில்லைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விழிப்புணா்வுப் பிரசுரங்களை பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவோா் மீது அலுவலா்கள் அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா். முன்னதாக, விழிப்புணா்வுப் பிரசார வாகனத்தை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் லிவிங்ஸ்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.