ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட ஆரோட்டுப்பாறை, பெரியசூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சியின் செயல் அலுவலா் சி.ஹரிதாஸ் தலைமையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசின் கரோனா தடுப்பு நெறிமுறைகள் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. வணிக வளாகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், அனைத்து நிலை பணியாளா்கள் கலந்துகொண்டனா்.