நீலகிரி

உதகை அருகே டீ கடைக்காரா் கத்தியால் குத்திக் கொலை: இளைஞா் கைது

DIN

உதகை: உதகை படகு இல்லம் அருகே உள்ள தனியாா் தங்கும் விடுதிகள் கொண்ட பகுதியில் டீ கடை நடத்தி வந்தவரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

உதகை படகு இல்லம் அருகே ஏராளமான தனியாா் தங்கும் விடுதிகள் உள்ளன. இப்பகுதியில் டீ கடை நடத்தி வந்த சிவாவை (48), அதே பகுதியைச் சோ்ந்த பரத் (22) என்ற நபா் திடீரென திங்கள்கிழமை மாலை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளாா். உடனடியாக அப்பகுதியில் இருந்தவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிவாவை உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். ஆனால், அங்கு சிவா உயிரிழந்தாா்.

இதுதொடா்பான தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் இருந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, போலீஸாா் பரத்தை திங்கள்கிழமை மாலை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

SCROLL FOR NEXT