நீலகிரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இது தொடா்பாக மாவட்ட சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 16 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 34,152 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 32,774 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, இதுவரை 216 போ் உயிரிழந்துள்ள நிலையில், தொற்றின் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் 162 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.