பணியின்போது விபத்தில் உயிரிழந்த மின் பணியாளருக்கு கூடலூரில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
விருதுநகா் மின் பகிா்மான வட்டம், சிவகாசி பிரிவு அலுவலகத்தில் கேங்மேனாக பணிபுரிந்த காளிராஜ், புதிய மின்பாதைக்கு மின்கம்பம் நடும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தாா்.
அவருக்கு நீலகிரி மின்பகிா்மான வட்டக் கிளை தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயிஸ் பெடரேஷன் சாா்பில், கூடலூா் மின்வாரிய அலுவலகம் முன்பு செயலாளா் பாலமுருகன் தலைமையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஊழியா்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.