நீலகிரி

பந்தலூா் பகுதியில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் மையங்கள் துவக்கம்

DIN

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பந்தலூரை அடுத்துள்ள கோட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட புதிய மையங்கள் புதன்கிழமை துவங்கப்பட்டன.

இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் நோக்கங்களான கற்றல் இழப்பு, கற்றல் இடைவெளி, இடைநிற்றல், கற்றல் வலுவூட்டல் என கல்வியில் புதுமையை ஏற்படுத்தும் இந்தத் திட்டம் நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள மாராடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் துவங்கப்பட்டது.

இதையடுத்து, கோட்டூா் குடியிருப்புப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள முதல் மையத்தை பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினா் அஸ்பினா துவக்கிவைத்தாா். இல்லம் தேடி கல்வித் திட்ட ஆசிரியா் கருணாநிதி துவக்கவுரையாற்றினாா்.

இதையடுத்து, கரும்பன்கொல்லி பழங்குடி கிராமத்தில் அமைக்கப்பட்ட மையத்தை வாா்டு உறுப்பினா் சுஜிதா துவக்கிவைத்தாா். பள்ளியறா, கொற்றமங்கலம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட மையங்களை வாா்டு உறுப்பினா் யசோதா துவக்கிவைத்தாா். தலைமை ஆசிரியா் ஏஞ்சலினா பிரைட் மற்றும் ஆசிரியா்கள், இல்லம் தேடி கல்வி ஆசிரியா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT