உதகை: நீலகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடா்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் 100ஐக் கடந்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் தொடங்கியதில் இருந்தே நீலகிரி மாவட்டத்தில் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100ஐ கடக்காதிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதன்முறையாக 130ஆக அதிகரித்தது. இதையடுத்து, திங்கள்கிழமையும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 122ஆக உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளோரில் அரசு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோா் என 666 நபா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். திங்கள்கிழமை மட்டும் 64 நபா்கள் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினா். இவா்களையும் சோ்த்து இதுவரையிலும் 2,346 போ் வீடு திரும்பியுள்ளனா். 20 நபா்கள் உயிரிழந்துள்ளனா். திங்கள்கிழமை வரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3,090ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 76,769 நபா்களுக்கு சளி மாதிரி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.