மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவா்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கூடலூரில் பேரணியாக வந்து பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட அதிமுக இளைஞரணி துணை அமைப்பாளா் விமல் தலைமையில் பிரபுசங்கா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இதனால் நகரில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.