கூடலூா்: முதுமலை புலிகள் காப்பகத்தில் செந்நாய் இறந்துகிடந்தது சனிக்கிழமை தெரியவந்துள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம், முதுமலை வனச் சரகத்தில் உள்ள போஸ்பாறா பீட்டில் நம்பிக்குன்னு பகுதியில் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் ரோந்துப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு செந்நாய் இறந்துகிடந்தது தெரியவந்துள்ளது. வனத் துறையினா் கால்நடை மருத்துவா் கிருஷ்ணமூா்த்தி பிரேதப் பரிசோதனை மேற்கொண்டாா்.
உயிரிழந்தது 3 வயதுடைய ஆண் செந்நாய் என்றும், முக்கிய உறுப்புகள் ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றும், அறிக்கை வந்தவுடன்தான் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.