குன்னூா், செப். 18: நீலகிரி மாவட்டத்தில் 72 நபா்களுக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 72 நபா்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 2750ஆக உயா்ந்துள்ளது. 2,144 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது வரை 589 நபா்கள் அரசு, தனியாா் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 17 போ் நோய்த் தொற்று காரணமாக இறந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.