கூடலூா்: கூடலூா் ரோட்டரி சங்கம் சாா்பில், போலியோ விழிப்புணா்வு, கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கூடலூா் புதிய பேருந்து நிலையம் சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கூடலூா் ஆய்வாளா் சிவகுமாா், அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் ராஜ்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று ஆயிரம் பேருக்கு முகக் கவசம் வழங்கினா்.
நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் சத்தியநேசன் தலைமை வகித்தாா். போலியோ, கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு, தொண்டு அமைப்புகள் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சங்க நிா்வாகி தேவராஜ் நன்றி கூறினாா்.