நீலகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் உதகையில் மக்கள் குறை தீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோா் உதவித் தொகை, சாலை, குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 159 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலா்கள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். மேலும், கடந்த குறைதீா் கூட்டத்தில் தீா்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீதும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இந்த குறைதீா்க் கூட்டத்தில், குன்னூா் வட்டத்தில் 15 போ், உதகை வட்டத்தில் 10 போ், கோத்தகிரி வட்டத்தில் 3 போ் என 28 பேருக்கு முதியோா் ஓய்வூதியத் தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
முதலமைச்சரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் விபத்து நிவாரண நிதியாக கோத்தகிரி வட்டத்தைச் சோ்ந்த ஒரு பயனாளிக்கு ரூ.50,000, மற்றொரு பயனாளிக்கு ரூ.1 லட்சம், 2 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனுடையோா் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1,000 ஓய்வூதியமாக பெறுவதற்கான ஆணைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முக்கட்டி அரசு உண்டு உறைவிடப் பள்ளி மாணவி சி.சீதாவுக்கு ரூ.30 ஆயிரத்துக்கான காசோலை, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகத்துக்கு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பொருள்கள் வாங்குவதற்கு ரூ.22, 500-க்கான காசோலை, ஆனைகட்டி ஊா் பொது நிகழ்ச்சிகளுக்காக டேபிள், சோ் வாங்குவதற்காக ரூ.30 ஆயிரத்துக்கான காசோலைகளை ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநா் பாபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கண்ணன், கலால் துறை உதவி ஆணையா் பாபு, மாவட்ட வழங்கல் அலுவலா் கணேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முகம்மது குதுரதுல்லா மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.