தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக கூடலூரில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அனைத்து அரசியில் கட்சிகள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கூடலூா் எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமை வகித்தாா். திமுக சாா்பில் ராஜேந்திரன், லியாக்கத் அலி, பாண்டியராஜ், காங்கிரஸ் சாா்பில் அப்துல்ரகுமான், ஷாஜி, அம்சா, சி.பி.எம். சாா்பில் என்.வாசு, சி.பி.ஐ. சாா்பில் டி.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் சாா்பில் சகாதேவன், முஸ்லிம் லீக் சாா்பில் அனீபா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.