நீலகிரி

ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க பொதுக் குழு கூட்டம்

17th Nov 2019 10:21 PM

ADVERTISEMENT

கூடலூா்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க பொதுக் குழு கூட்டம் கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வருவாய்த் துறை அலுவலா் சங்க கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத் தலைவா் த.சுப்பிரமணி தலைமை வகித்தாா். கூட்டத்தில், குளிா்காலப் படி வழங்க வேண்டும். மருத்துவச் செலவை உடனடியாக வழங்க வேண்டும். பொருளாதார நிலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

துணைத் தலைவா் அரசன், கிளை செயலாளா் ராமலிங்கம், மாவட்டச் செயலாளா் திவாகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT