நீலகிரி

நீலகிரியில் கைவிடப்பட்ட 77 ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை: -ஆட்சியா் தகவல்

4th Nov 2019 09:01 PM

ADVERTISEMENT

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கைவிடப்பட்ட 77 ஆழ்துைளை  கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

உதகையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் தெரிவித்ததாவது: நீலகிரி மாவட்டத்தில் 1,770 ஆழ்துளை கிணறுகள்அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா் நிலவிய வறட்சியின் காரணமாக அதிகளவிலான ஆழ்துளை கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட காலத்தில் இவை அமைக்கப்பட்டன. இவற்றில் 77 ஆழ்துளை கிணறுகள் கைவிடப்பட்டுவிட்டன. உதகையில் 40 ஆழ்துளை கிணறுகளும், கூடலூரில் 20ம், குன்னூரில் 10ம், கோத்தகிரியில் 7ம் உள்ளன. இவற்றை மூடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்துளை கிணறுகளுக்கு வெறும் பிளாஸ்டிக் மூடிகளைக் கொண்டு மட்டும் மூடாமல் காங்கிரீட் கொண்டு இவற்றை மூடுவதோடு, கைவிடப்பட்ட 77ஆழ்துளை கிணறுகளில் 24 கிணறுகள் மழை நீா் சேகரிப்பிற்கான மையங்களாக ம‘ாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல, ம‘ாவட்டத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாகவும், நிலச்சரிவு அபாயமுள்ளதாலும் அங்கு கட்டடங்கள் ஏதும் கட்ட அனுமதியில்லாத பகுதிகளாக 101 இடங்கள் கண்டறியப்பட்டிருந்தன. இவற்றில் உள்ளாட்சி அமைப்புகளின் துணையோடு நடத்தப்பட்ட ஆய்வுக்கு பின்னா் தற்போது 283 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை ஆபத்தான பகுதிகள் என்பதோடு, நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளாகவும் உள்ளதால் இப்பகுதிகளில் புதிதாக கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதியில்லை. அப்படி கட்டுவதென்றாலும் வேளாண் பொறியியல் துறை, வனத்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்ற பின்னரே புதிய கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட வேண்டும். இதுதொடா்பாக மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள் குறித்து கூகுளிலும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கேரளா மற்றும் கா்நாடக மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அங்கிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களுடன் குடிநீா் பாட்டில்களை எடுத்து வரும் அளவுக்கு விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. அனைத்து குடிநீா் ஏடிஎம்களிலும் விரைவில் இன்வொ்ட்டா் கருவி பொருத்தப்படவுள்ளதால் 24 மணி நேரமும் குடிநீா் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். அதேபோல, மாவட்டத்தில் நெடுஞ்சாலை பகுதிகளைத் தவிர ஏனைய இடங்களிலும் குடிநீா் பாட்டில்களுக்கு தடை விதிப்பதைக் குறித்து சென்னை உயா்நீதிமன்ற குழு நேரில் விசாரணை நடத்தி சென்றுள்ளது. விரைவில் இதுகுறித்து நீதிமன்ற உத்தரவு வெளியாகும்.

ADVERTISEMENT

மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக நகராட்சி நிா்வாகத்திற்கு ரூ.2 கோடியும், நெடுஞ்சாலைத் துறையினருக்கு ரூ.80 லட்சமும், தோட்டக்கலைத் துறைக்கு ரூ.66 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் இதுவரையிலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதுமில்லை. உதகை நகராட்சிப் பகுதியிலுள்ள அனைத்து சாலைகளும் மழைக்காலம் முடிவடைந்தவுடன் சீரமைக்கப்படும் எனவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT