கூடலூரை அடுத்துள்ள புளியம்வயல் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் உள்ள தொங்கும் பாலத்தை சீரமைத்து நிரந்தர பாலம் அமைத்துத் தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவர்சோலை பேரூராட்சியில் உள்ள புளியம்வயல் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் தங்கள் கிராத்துக்குச் செல்லும் வழியில் பாண்டியாறு ஆற்றின் குறுக்கே மரத்தால் ஆனதொங்கும் பாலத்தை அமைத்து அதில் சென்றுவருகின்றனர்.
இப்பகுதியில் அவசரத் தேவைக்கு வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது. எனவே, தொங்கும் பாலத்தை அகற்றிவிட்டு நிரந்தரமாக வாகனங்களும் செல்லும் வகையில் பாலம் அமைத்துத் தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.