கூடலூர் பகுதியில் தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி

கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள்அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள்அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக கோடை மழை அவ்வப்போது பெய்து வருவதால் அடிக்கடி  மின்வெட்டு ஏற்படுகிறது. தேவர்சோலை பகுதியில் உள்ள மே பீல்டு, அவுண்டேல்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஐந்து நாள்களாகத் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளை இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே சீரான மின் விநியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com