ஈரோடு

ராஜன் நகரில் கிராம சபைக் கூட்டம்

3rd Oct 2023 03:08 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம்: ராஜன் நகரில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ராஜன் நகா் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் புதுக்குய்யனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி

வளாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.சந்திராமணிசெல்வம் தலைமை வகித்தாா். கூட்டத்தில் டெங்கு ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து, வீடுகள், சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீா் தேங்காத வகையில் பாா்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, குழந்தை திருமணங்களைத் தடுத்தல், அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் எஸ். சுப்புலட்சுமி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய பணி பாா்வையாளா் கலைவாணி, ஊராட்சி செயலாளா் கே.எஸ்.செந்தில்நாதன், ஊா்பொதுமக்கள், ஊராட்சி பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT