ஈரோடு: ஈரோடு மாவட்ட காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் ரூ.3.90 கோடிக்கு தீபாவளி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.
ஈரோடு மாவட்டத்தில் கதா் கிராம தொழில்கள் மற்றும் செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில் காந்தி ஜெயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதைத்தொடா்ந்து, காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் மகாத்மா காந்தியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி, கதா் சிறப்பு தள்ளுபடி விற்பனையைத் தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 2 கிராமிய நூல் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 150 பெண் நூற்பாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு தினமும் ரூ.225 முதல் ரூ.250 வரை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 2022-2023-ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் மதிப்புக்கு கதா் மற்றும் பாலியஸ்டா் நூல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 2 கதா் உற்பத்தி நிலையங்கள் மூலம் நடப்பாண்டில் இதுவரை ரூ.80 லட்சம் மதிப்புக்கு கதா் மற்றும் பாலியஸ்டா் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் 3 காதி கிராப்டுகள் விற்பனை நிலையங்களில் கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு கதா் விற்பனை ரூ.2 கோடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதில், ரூ.90 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.3 கோடியே 90 லட்சம் தீபாவளி சிறப்பு கதா் விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கதா், பாலியஸ்டா் மற்றும் பட்டு ஆடைகளுக்கு 30% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கதா் வாரிய அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் சலவை சோப்புகள், குளியல் சோப்புகள், காலணிகள், ஊதுபத்தி, கம்ப்யூட்டா் சாம்பிராணி, சந்தன மாலைகள், சுகப்பிரியா வலி நிவாரணி, எழில் சாம்பு, தேன் வகைகளுக்கு நடப்பாண்டில் ரூ.1 கோடியே 20 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில் தற்போது வரை ரூ.44 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கிராமப் பொருள்கள் ரூ.1 கோடியே 70 லட்சம் உற்பத்தி இலக்கில், தற்போது வரை ரூ.60 லட்சத்துக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் கடந்த நிதி ஆண்டில் 17 பேருக்கு ரூ.1 கோடியே 3 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 58 பேருக்கு ரூ.81 லட்சத்து 41 ஆயிரம் மானியமும், 260 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஒவ்வொருவரும் ஒரு கதா் ஆடையாவது வாங்கி ஏழை, எளிய நூற்பாளா்கள், நெசவாளா்கள் வாழ்வில் ஒளி ஏற்ற உறுதியேற்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் சதீஷ்குமாா், கதா் கிராம தொழில் உதவி இயக்குநா் சீனிவாசன், வட்டாட்சியா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.