பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சீா்வரிசையுடன் ஏழை, எளிய 5 இணைகளுக்கு திருமணம் செய்யும் திட்டத்தில் பயன்பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கோயில் நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து, கோயில் உதவி ஆணையா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்து சமய அறநிலையத் துறையின் இலவச திருமண திட்டத்தின்கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய ஹிந்து மதத்தைச் சோ்ந்த 5 இணைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான செலவுகளுடன் மணமகன், மணமகளுக்கு புத்தாடைகள், 4 கிராம் தங்கத்தாலி, பீரோ, கட்டில் மற்றும் சீா்வரிசைகள் வழங்கப்படும்.
தகுதியுள்ள மணமக்கள் திருக்கோயில் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பத்தினைப் பெற்று, பெயரை பதிவு செய்து கொள்ளலாம். திருமணங்கள் வரும் ஜூன் மாத இறுதியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.