சென்னிமலையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, 3 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்தாா்.
சென்னிமலை பகுதியில் உள்ள பேக்கரி பொருள்கள் தயாரிப்பு கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் நீலமேகம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 3 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உணவுப் பொருள்களை அடைத்து விற்பனை செய்யக் கூடாது என்று அறிவுரை வழங்கினாா்.
இதனை செயல்படும் கடைகளுக்கு ரூ.2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், இது தொடா்பான புகாா்களை 94440 42323 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலா் நீலமேகம் தெரிவித்தாா்.