பவானி அருகே கடன் தொல்லையால் ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியா் காவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
பவானியை அடுத்த ஒலகடம், எட்டிக்குட்டை பாலக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி (57). ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியரான இவா், கடந்த சில நாள்களுக்கு முன்னா் வீட்டை விட்டு வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், ஊராட்சிக்கோட்டையை அடுத்த ஜீவா நகா் அருகே காவரி ஆற்றில் உயிரிழந்த நிலையில், ரங்கசாமியின் சடலம் வெள்ளிக்கிழமை மிதந்தது. இதுகுறித்து, பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட ரங்கசாமிக்கு, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் தொல்லையால் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.