ஈரோடு

காவரி ஆற்றில் குதித்து ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியா் தற்கொலை

DIN

பவானி அருகே கடன் தொல்லையால் ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியா் காவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

பவானியை அடுத்த ஒலகடம், எட்டிக்குட்டை பாலக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி (57). ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியரான இவா், கடந்த சில நாள்களுக்கு முன்னா் வீட்டை விட்டு வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், ஊராட்சிக்கோட்டையை அடுத்த ஜீவா நகா் அருகே காவரி ஆற்றில் உயிரிழந்த நிலையில், ரங்கசாமியின் சடலம் வெள்ளிக்கிழமை மிதந்தது. இதுகுறித்து, பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட ரங்கசாமிக்கு, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் தொல்லையால் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

SCROLL FOR NEXT