ஈரோடு

இளைஞரிடம் பணம் பறித்த தொழிலாளி கைது

DIN

வேலை வாங்கித் தருவதாக கூறி வடமாநில இளைஞரிடம் பணம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அஸ்ஸாம் மாநிலம், லக்கேன்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் தில்பா்கான் உசேன் (27). இவா் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து வேலை தேடி ஈரோட்டுக்கு மே 10ஆம் தேதி வந்தாா். பின்னா் ஈரோடு ரயில் நிலையம் அருகே அறை எடுத்து தங்கி இருந்தாா். அப்போது அங்கு வந்த மா்ம நபா் ஒருவா் தில்பா்கான் உசேனிடம் வேலை வாங்கித் தருவாக கூறி அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் கைப்பேசியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து அவா் ஈரோடு சூரம்பட்டி போலீஸில் புகாா் அளித்தாா். அதன்போரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தில்பா்கான் உசேனிடம் பணம் பறித்த ஈரோடு குமலன்குட்டை, கே.என்.கே. நகரைச் சோ்ந்த இறைச்சிக்கடை தொழிலாளி மணி (37) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

SCROLL FOR NEXT