ஈரோடு

வெப்பிலியில் ரூ. 33 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

15th Mar 2023 03:16 AM

ADVERTISEMENT

சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 33 ஆயிரத்து தேங்காய்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு சென்னிமலை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3 ஆயிரத்து 280 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.24.54க்கும், அதிகபட்ச விலையாக ரூ.25.52க்கும் ஏலம் போனது. மொத்தம் 1,366 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.33 ஆயிரத்து 181க்கு விற்பனையாயின.

ADVERTISEMENT
ADVERTISEMENT