பெருந்துறை ஒன்றியம், ஆயிக்கவுண்டம்பாளையத்தில் 4 வீதிகளில் ரூ. 20 லட்சத்தில் வடிகால், தாா் சாலை ஆகியவை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
ஒன்றிய நிதியில் நடைபெறும் இந்தப் பணியை பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் தொடங்கிவைத்தாா்.
இதில், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ், துணைத் தலைவா் உமா மகேஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.