ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் சாலையில் சிறுத்தை வாகன ஓட்டிகள் அச்சம்

DIN

திம்பம் மலைப் பாதையில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனப் பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலவி வருவதும், சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.

இந்நிலையில் திம்பம் மலைப் பாதை 24ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சிறுத்தை சாலையில் நடந்து சென்றது. இதை அந்த வழியாக வாகனத்தில் பயணித்த ஒருவா், தனது கைப்பேசியில் விடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.

தற்போது திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், வன விலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும் எனவும், திம்பம் மலைப் பாதை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்களைக் கவனத்துடன் இயக்க வேண்டும் என்றும் வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா். சாலையில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை மிரட்டல்

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

SCROLL FOR NEXT