அரசுப் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் ஓட்டுநா் காயம் அடைந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூரில் இருந்து இருட்டிபாளையத்துக்கு 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. பேருந்தை தேவராஜ் ஓட்டினாா். இருட்டிபாளையம் ஏற்றமான சாலையில் பேருந்து திரும்பியபோது எதிரே வேகமாக வந்த வேன் பேருந்து மீது மோதியது. இதில் வேன் ஓட்டுநா் தங்கவேல் லேசான காயத்துடன் தப்பினாா். விபத்தில் வேனின் முகப்பு சேதமைடந்தது.
விபத்து குறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.