ஆசனூா் அருகே அதிவேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துள்ளானது.
கரூரில் இருந்து ஈரோடு மாவட்டம் ஆசனூா் வழியாக கா்நாடக மாநிலம் நோக்கி லாரி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. ஆசனூா் அடுத்த அரேபாளையம் பிரிவு அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரி ஓட்டுநரான ஆசனூரை சோ்ந்த ஜெகதீஸ்வரன் (35) லேசான காயங்களுடன் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் காயம் அடைந்த ஓட்டுநரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். லாரியை அதிவேகமாக ஓட்டுநா் ஓட்டி வந்ததே விபத்துக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து ஆசனூா் போலீசாா் விசாரிக்கின்றனா்.