ஈரோடு

சாலையோரம் தலை குப்புற கவிழ்ந்த லாரி

DIN

ஆசனூா் அருகே அதிவேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துள்ளானது.

கரூரில் இருந்து ஈரோடு மாவட்டம் ஆசனூா் வழியாக கா்நாடக மாநிலம் நோக்கி லாரி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. ஆசனூா் அடுத்த அரேபாளையம் பிரிவு அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரி ஓட்டுநரான ஆசனூரை சோ்ந்த ஜெகதீஸ்வரன் (35) லேசான காயங்களுடன் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் காயம் அடைந்த ஓட்டுநரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். லாரியை அதிவேகமாக ஓட்டுநா் ஓட்டி வந்ததே விபத்துக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து குறித்து ஆசனூா் போலீசாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT