பெருந்துறை அருகே சாலையில் சென்ற காா் திங்கள்கிழமை தீப்பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக அதில் பயணித்த 5 பேரும் உயிா்த் தப்பினா்.
தூத்துக்குடி மாவட்டம், மணல்விளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜலிங்கம் (23). இவா் அவிநாசி- மங்கலம் சாலையில் பாத்திர கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், கடையில் பணியாற்றும் ஜெயராமன் (20), அருண்குமாா் (20), மூா்த்தி (42), சௌந்தரபாண்டியன் (18) ஆகியோருடன் அவிநாசியில் இருந்து ஈரோட்டுக்கு காரில் திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா்.
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, காரில் திடீரென புகை எழுந்துள்ளது. சுதாரித்துக் கொண்ட அனைவரும் காரில் இருந்து உடனடியாக கீழே இறங்கினா். சிறிது நேரத்தில் காா் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை தீயணைப்புத் துறையினா் காரில் பரவிய தீயை அணைத்தனா்.
இருப்பின் காா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.