ஈரோடு

வீட்டில் சாராய ஊறல் வைத்திருந்த 2 போ் கைது

DIN

வீட்டில் சாராய ஊறல்போட்டு வைத்திருந்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியில் சாராய ஊறல் இருப்பதாக ஈரோடு மதுவிலக்குப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு போலீஸாா் மற்றும் தனிப் பிரிவு போலீஸாா் சென்னிமலை மணிமலைக்கரடு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தனா்.

அப்போது, அந்த கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி (47) வீட்டில் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்ச உபயோகப்படுத்தக்கூடிய பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் சுப்பிரமணியும், அதே பகுதியைச் சோ்ந்த சாமிநாதன் (62) என்பவரும் சோ்ந்து சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 40 லிட்டா் சாராய ஊறல், சாராயம் காய்ச்ச பயன்படுத்தக்கூடிய பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT