ஈரோடு

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

DIN

பெருந்துறை அருகே அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் வீட்டில் 3 பவுன் நகை, ரூ.30 ரொக்கம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருந்துறையை அடுத்த கரட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (54), அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறாா்.

இவா் துணி எடுப்பதற்காக மனைவியுடன் ஈரோட்டு வெள்ளிக்கிழமை காலை சென்றுள்ளாா்.

மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் மாதேஸ்வரன் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT