ஈரோடு மாவட்டத்தில் ரயத்து நிறுத்தப்பட்ட பதிவுகளில் பட்டா வழங்குவது தொடா்பாக சிறப்பு முகாம் வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகள், நகராட்சி, மாநகராட்சிப் பகுதியில் நத்தம், நகர நில அளவை கிராம ஆவணங்களில் ரயத்து நிறுத்தப்பட்டது என பதிவு செய்யப்பட்ட ரயத்து மனை, ரயத்து நஞ்சை, ரயத்து புஞ்சை நிலங்களுக்கு ஆவணங்களின் அடிப்படையில் பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த இனங்களில் பட்டா வழங்குவது தொடா்பான சிறப்பு முகாம் வட்டாட்சியா்கள், தனி வட்டாட்சியா்கள் தலைமையில் வரும் 30 ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து, பட்டா பெறலாம்.
முகாம் நடைபெறும் இடங்கள்: சத்தியமங்கலம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் வி.ரவிசந்திரன் தலைமையில் வரும் 6, 7, 13, 14, 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் கோபி உள் வட்டத்திலும், கோபி கோட்ட கலால் அலுவலா் எஸ்.ஆசியா தலைமையில் வரும் 6, 7, 20, 21, 27 மற்றும் 28 ஆம் தேதி வாணிப்புத்தூா் உள்வட்டத்திலும், 8, 12, 13, 14, 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் சிறுவலூா் உள்வட்டத்திலும் முகாம் நடைபெறவுள்ளது.
கோபி தனி வட்டாட்சியா் அஷ்ரப்புன்னிசா தலைமையில் வரும் 6, 7, 13, 14, 20, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் கூகலூா் உள்வட்டத்திலும், கோபி கலால் மேற்பாா்வையாளா் சையத் ஹமீது தலைமையில் வரும் 13, 14 ஆம் தேதி காசிபாளையம் உள்வட்டத்திலும், நம்பியூா் தனி வட்டாட்சியா் துரைசாமி தலைமையில் வரும் 6, 7, 8, 13, 14, 20, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் நம்பியூா் உள் வட்டத்திலும் சிறப்பு முகாம் நடைபெளது.
அந்தியூா் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் பி.எம்.சண்முகசுந்தரம் தலைமையில் வரும் 6, 7, 8, 13, 14, 15, 20 மற்றும் 21 ஆம் தேதிகள் எலத்தூா் உள்வட்டத்திலும், தனி வட்டாட்சியா் துரைசாமி தலைமையில் வரும் 22, 23
ஆம் தேதி வேமாண்டம்பாளையம் உள்வட்டத்திலும், கோபி தனி வட்டாட்சியா் காா்த்திக் தலைமையில் வரும் 6, 7, 13, 14, 20 மற்றும் 21 ஆம் தேதிகள் அந்தியூா் உள்வட்டத்திலும், வரும் 15, 16, 22, 23, 27 மற்றும் 28 ஆம் தேதிகள் அத்தாணி உள்வட்டத்திலும் முகாம் நடைபெறவுள்ளது.
சத்தியமங்கலம் தனி வட்டாட்சியா் சந்திரசேகா் தலைமையில் வரும் 6, 7, 13, 14, 15, 20, 21, 27 மற்றும் 28 ஆம் தேதி அம்மாபேட்டை உள்வட்டத்திலும், கோபி தனி வட்டாட்சியா் அஷ்ரப்புன்னிஷா தலைமையில் வரும் 8, 9, 15, 16, 27 மற்றும் 28 ஆம் தேதி பவானி உள்வட்டத்திலும், கோபி தனி வட்டாட்சியா் சிவகாமி தலைமையில் குறிச்சி உள் வட்டத்தில் வரும் 14, 15 ஆம் தேதியும், கவுந்தப்பாடி உள்வட்டத்தில் வரும், 13, 16, 20, 21, 22, 23, 26, 27 மற்றும் 28 தேதியும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.