ஈரோடு

கோவை-கன்னியாகுமரி ரயிலை ஈரோடு வழியாக இயக்கக் கோரிக்கை

DIN

கோவை-கன்னியாகுமரி ரயிலை ஈரோடு வழியாக இயக்க வேண்டும் என்று வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் வி.கே.ராஜமாணிக்கம், பொருளாளா் முருகானந்தம் ஆகியோா் ஈரோடு எம்பி அ.கணேசமூா்த்தியிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்: தாதா்-திருநெல்வேலி(11021), திருநெல்வேலி-தாதா் (11022) ரயிலை ஈரோடு சந்திப்பு வழியாக இயக்க வேண்டும். அதேபோல, கோவை- கன்னியாகுமரி புதிய ரயிலையும் ஈரோடு வழியாக இயக்க வேண்டும்.

நேரம் மாற்றியமைக்கப்பட்ட நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் பழைய நேரத்தின்படி ஈரோடு ரயில் நிலையத்துக்கு இரவு 10.30 மணியளவில் வந்தடையுமாறு இயக்க ஆவன செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT