ஈரோடு

ஆப்பக்கூடலில் அடிப்படை வசதிகள் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

ஆப்பக்கூடல் பேரூராட்சி 14ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரூராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பேரூராட்சி கவுன்சிலா் கே.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.பி.பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் ஏ.ஜெகநாதன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இப்பகுதி மககளுக்குத் தேவையான குடிநீா், தெருவிளக்கு, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி முழக்கம் எழுப்பப்பட்டது. கிளைச் செயலாளா் எம்.காளீஸ்வரன், நிா்வாகிகள் ஏ.ஆா்.துரைசாமி, ஏ.பி.திருநீலகண்டன், பி.தளிா்க்கொடி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதேபோல, புன்னம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக பவானி வட்டார செயலாளா் எஸ்.மாணிக்கம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வேலாமரத்தூரில் கட்டப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படாத கழிப்பிடத்தை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ் மொழிக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கு.மு. அண்ணல் தங்கோ: பழ.நெடுமாறன் புகழாரம்

மே தினம் உள்பட இதர நிகழ்வுகளுக்கு எங்கே அனுமதி பெறலாம்? தலைமைத் தோ்தல் அதிகாரி விளக்கம்

9 சதவீதம் வீழ்ந்த வேளாண் பொருள்கள் ஏற்றுமதி

கேரளத்தில் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் காங்., இடதுசாரிகள்: அமித் ஷா குற்றச்சாட்டு

மே 31-க்குள் ஆதாா்-பான் இணைப்பு: அதிக விகிதத்தில் டிடிஎஸ் பிடித்தம் இல்லை

SCROLL FOR NEXT