ஈரோடு

வேட்புமனு தாக்கல் எப்போது?: இளங்கோவன் விளக்கம்

DIN

வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ். இளங்கோவன் கூறினாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஈவிகேஎஸ். இளங்கோவன் போட்டியிடுகிறாா். திமுக சாா்பில் தோ்தல் பிரசாரம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மேட்டுக்கடையில் உள்ள திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வெளியில் வந்த வேட்பாளா் ஈவிகேஎஸ். இளங்கோவனிடம் வேட்பு மனு தாக்கல் எப்போது என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த அவா் வேட்பு மனு தாக்கல் செய்வது தொடா்பாக அமைச்சா் சு.முத்துசாமி மற்றும் முக்கிய நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் தேதி முடிவு செய்யப்படும் என்றாா்.

பிப்ரவரி 3 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது தொடா்பாக செய்தியாளா்கள் கேள்விக்கு பதில் அளித்த அவா், வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை, தேதி முடிவு செய்யப்பட்டதும் தகவல் தெரிவிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT