சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன் நகா் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் எஸ். சந்திராமணி செல்வம் தலைமை தாங்கினாா். ஊராட்சி துணைத் தலைவா் பி.விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் அனைத்து மக்களுக்கும் வீடு வழங்கும் திட்டம், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும்,
டெங்கு காய்ச்சல் பரவுவதால் தண்ணீரைக் காய்ச்சி குடிக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்துவது குறித்து உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், வாா்டு உறுப்பினா்கள் கே.பி.கருப்புசாமி, எம்.நிா்மலாதேவி, வி.பழனிச்சாமி, எஸ்.சக்திவேல், எம். விஜயலட்சுமி, ஊராட்சி செயலாளா் கே.எஸ். செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.